அஹிம்சாவாதி

இரண்டு ரொட்டி துண்டுடன்
ஒரு நாட்டு கோழி முட்டையில்
செய்த ஆம்லெட்டுடன்
காலை உணவை முடிச்சாச்சு.

ஆபிஸ் வரும் வழியில்
திறந்திருத்த கசாப்பு கடையில்
ஒரு முழு நாட்டு கோழியை
வீட்டுக்கு கொடுக்க சொல்லியாச்சு.

ஆபிஸ் வந்த பின் மனைவியை
கூப்பிட்டு கோழியின் கால் எழும்பை
சூப் வைக்க சொல்லியும் மிஞ்சியதை
கொளம்பாகவும் வைக்க சொல்லியாச்சு.

மணி பதினொன்றுக்கு ஆபிஸ் பாய்
கொண்டு வந்து வைத்த பிஸ்கட்டின்
மேல் ஒடிய எறும்பை கொன்று விட்டு
டியையும் குடிச்சாச்சு.

மரண தண்டைன சரியென சொன்ன
பக்கத்து சீட் காரனிடம் காந்தி பிறந்த
நாட்டில் மனிதனின் உயிர் எடுப்பது
பாவமுன்னு புத்தியில உரைக்க சொல்லியாச்சு.

மதிய உணவின் போது மரண தண்டனை
தப்பாங்க என கேட்ட மனைவியிடம்
 எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு
நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி
மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.

- இராமசாமி கண்ணண். 

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

50 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. கலக்கல்....... "பஞ்ச்" கவிதை!

    பதிலளிநீக்கு
  2. நான் படிச்சிட்டேன்..! நன்றிங்கண்ணா..!

    பதிலளிநீக்கு
  3. அடடடா... ஒரே மரண தண்டனையா இருக்குப்பா.. எங்க பார்த்தாலும்.

    இதை... பாராக்ராப்பா அடிச்சாதான் என்ன வந்துடுங்கறேன்?

    பதிலளிநீக்கு
  4. ஹாலிவுட் பாலா சொன்னது…

    அடடடா... ஒரே மரண தண்டனையா இருக்குப்பா.. எங்க பார்த்தாலும்.

    இதை... பாராக்ராப்பா அடிச்சாதான் என்ன வந்துடுங்கறேன்?
    ---
    மொத்தம் ஆறு பாரகிராப் இருக்கே தல. கரக்டாத்தான்ன அடிச்சுருக்கேன்...

    பதிலளிநீக்கு
  5. // எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு
    நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி
    மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.//

    கரண்டு அடிக்குதுங்க கவிதையில ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி
    மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.//

    சிக்கன் குழம்பா ?

    பதிலளிநீக்கு
  7. செம லந்து கவிதை நண்பா
    இப்போதான் மான்சூன் வெட்டிங் படம் பார்த்து முடிச்சேன்,நல்லா 2 மணிநேரம் போனதே தெரியலை ,முடிஞ்சா பாருங்க.

    பதிலளிநீக்கு
  8. //மான்சூன் வெட்டிங் படம் பார்த்து முடிச்சேன்,நல்லா 2 மணிநேரம் போனதே தெரியலை ,முடிஞ்சா பாருங்க.
    //

    பார்க்கனும். பார்த்துடுவோம்.

    பதிலளிநீக்கு
  9. //மொத்தம் ஆறு பாரகிராப் இருக்கே தல. கரக்டாத்தான்ன அடிச்சுருக்கேன்...//

    சரியா ஆறு லைன் வந்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
  10. //இப்போதான் மான்சூன் வெட்டிங் படம் பார்த்து முடிச்சேன்,நல்லா 2 மணிநேரம் போனதே தெரியலை ,முடிஞ்சா பாருங்க.//


    கவிதையை பத்தி எழுதியிருக்கறப்ப, மான்சூனை பத்தி பேசறீங்களே தல? இதுக்கா நான் கவிதை எழுதினேன்?

    பதிலளிநீக்கு
  11. ஏங்க ராமசாமி அவரை திட்டுறீங்க? எப்பவும் போல எதோ நம்ம ஃப்ரெண்டாச்சே-ன்னு எதோ எழுதிட்டாரு. எதாவது பிரச்சனைன்னா மெயிலில் பேசிக்கலாமே?

    இப்படி எல்லார் முன்னாடியுமா?

    பதிலளிநீக்கு
  12. பின்ன என்னங்க தல...

    நான் இலக்கியம் ரேஞ்சுக்கு ஒரு கவிதை எழுதினா.. இவரு மான்சூன் வெட்டிங், மான்சூன் இழவு-ன்னு சொல்லுறாரே?

    பதிலளிநீக்கு
  13. ஹா... ஹா.. ஹா... கார்த்திக்கேயன் மேலயிருக்கற கமெண்ட் எல்லாம் நாந்தான் போட்டேன்.

    இராமசாமி பயந்துகிட்டு இப்ப அனானி ஆப்ஷனையே தூக்கிட்டாரு!!

    உங்களுக்கும் இந்த அதிர்ச்சி வைத்தியம் சீக்கிரம் உண்டு. ;)

    பதிலளிநீக்கு
  14. ஹஹஹஹா
    தல
    இதுல போயா,வேணுமா இன்னும் 4 திட்டு திட்டிக்குங்க,எனக்கு போட்டொ இல்லாம வரும்போதே நீங்க போட்டதுன்னு தெரியாதா?

    பதிலளிநீக்கு
  15. பாவங்க ராமசாமி நானெதோ ஹேக் பண்ணிட்டேங்கற ரேஞ்சுக்கு பயந்துட்டார் போல. :)

    நமக்கெல்லாம் அந்த அளவுக்கு அறிவு இருந்திருந்தா.. இன்னேரம் கூகிள்ல இல்ல வொர்க் பண்ணிட்டு இருந்திருப்போம். :)

    பதிலளிநீக்கு
  16. //போட்டொ இல்லாம வரும்போதே நீங்க போட்டதுன்னு தெரியாதா? //

    அது உங்களுக்குத் தெரியும். ஆனா உங்க ப்லாகில் கமெண்ட் போடுற அத்தனை பேருக்கும் தெரியுமா?

    என்னிக்காவது விவகாரமான ஒரு ஆள் உங்க ப்லாகில் கமெண்ட் போடட்டும். அப்ப அங்க வச்சிக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  17. அட இப்பத்தான் நோட் பண்ணுறேன். முன்னாடியெல்லாம் லேபிள்ல கவிதை-ன்னு போடுவீங்க. இப்ப ‘கவுஜை’ ஆய்டுச்சே...? :)

    பதிலளிநீக்கு
  18. தல
    சரி அனானிய வச்சிட்டு urlமட்டும் தூக்க முடிஞ்சா பாருங்களேன்.ஏன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் அனானியா போடுறாங்க,அவங்க கமெண்ட் போடுறதே பெரிசு.ஹிஹி

    பதிலளிநீக்கு
  19. ஹாலிவுட் பாலா சொன்னது…

    அட இப்பத்தான் நோட் பண்ணுறேன். முன்னாடியெல்லாம் லேபிள்ல கவிதை-ன்னு போடுவீங்க. இப்ப ‘கவுஜை’ ஆய்டுச்சே...? :)
    ---
    இல்லிங்க இதெல்லாம் கவிதன்னு சொன்னா நிரைய பேரு அடிக்க வருவாங்கோன்னு ஒரு பயம்...

    பதிலளிநீக்கு
  20. //சரி அனானிய வச்சிட்டு urlமட்டும் தூக்க முடிஞ்சா பாருங்களேன்.ஏன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் அனானியா போடுறாங்க,அவங்க கமெண்ட் போடுறதே பெரிசு.ஹிஹி
    //

    அதுக்கு கூகிள் வழி பண்ணினாதான் உண்டு கார்த்திக்கேயன். வேற வழியில்லை. உங்களை எதுனா செய்ய வேண்டியதுதான். :)

    பதிலளிநீக்கு
  21. ///எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு
    நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி
    மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.//

    'நச்'னு இருக்கு தல ...லைக் இட்...

    பதிலளிநீக்கு
  22. ’நச்’ சுனு இருக்குங்க வடைகொத்தி இராமசாமி! :)

    (கும்மி அடிக்கிற ஒரே இடம் இதான். அனானியத் தூக்கிட்டீங்களா? ச்சே!)

    பதிலளிநீக்கு
  23. நல்லா இருக்குங்க உங்க கவிதை. ஆமா நீங்க என்ன வி.ஆர்.கிருஷ்ணய்யர் கட்சியா? நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :)

    பதிலளிநீக்கு
  24. நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :)//

    ஏம்ப்பா மரா என் பக்கத்துல உங்கள பாராட்டியவங்களுக்கு நன்றி சொல்லாம இதென்ன பெரிய டவரா செட்டு!

    பதிலளிநீக்கு
  25. அஹிம்சாவாதியா? ஹிம்சாவாதியா?

    ரொம்ப நல்லாருக்குங்க

    பதிலளிநீக்கு
  26. கரண்டு அடிக்குதுங்க கவிதையில ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. நல்லாயிருக்கங்க தலைவரே ‘கவிஜை’

    பதிலளிநீக்கு
  28. தம்பி...

    பேசுபவர்கள் எல்லாம் ஜீவ காருண்யம் கொள்வதில்லை.....

    சிரிக்கவில்லை வலிக்கிறது.... ஆமாம் உண்மை சுடுகிறது.

    பதிலளிநீக்கு
  29. மரா telling
    நல்லா இருக்குங்க உங்க கவிதை. ஆமா நீங்க என்ன வி.ஆர்.கிருஷ்ணய்யர் கட்சியா? நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :)
    ---
    என்ன மாம்ஸூ சாதி பேரல்லாம் இருக்கு.. அப்புறம் இதுக்கு ஒரு கவிதை எழுத வேண்டி வரும் சொல்லிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  30. கவிதை கலக்கல் என்ன அழகாய் ஒரு நையாண்டி

    பதிலளிநீக்கு
  31. சாத்தூர்க்காரனுக கவிதை எழுதுனாவே காரம்தான்...., நீ அடிச்சி ஆடுப்பா...பின்னாடி நிக்கோம்.

    பதிலளிநீக்கு
  32. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
    hehe ///

    எல்லாத்துக்கும் ஒரு ரெடிமேட் கமென்ஸ் போடுரான்யா டேமேஜர் சிப்பு...

    பதிலளிநீக்கு
  33. மிஸ்டர்.ராம்சாமி...உங்களுக்குள்ள ஒரு நான்வெஜ் கவிஞர் இருக்காருன்னு இப்பத்தான் தெரியும்... கலக்குங்க தல..நல்லாருக்கு...

    பதிலளிநீக்கு
  34. 'மரண தண்டைன தவறு' என்று சொல்றவுங்களுக்கு வச்சங்க பாரு ஆப்பு.

    நம்ம ஊரு குப்பனுக்கும்,சுப்பனுக்கும் புரிகிற மாதிரி அழகாக தீட்டியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  35. நான் மகான் அல்ல... நல்லா இருக்கு...

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  36. முதல்ல ஒரு CCCF கொடுத்துர்றேன் (ஆனா CCCF அப்படின்னா என்னங்க்ரதைக் கடைசியாதான் சொல்வேன்). உனா தனா அண்ணன் போட்ட ஒரு பதிவிற்கு ராத்திரி முழுக்கக் கண் முழிச்சு உட்கார்ந்து 'I the first' அப்படின்னு ஒரு கமென்ட் போட்டேன். பதிவுலகத்துக்கு வந்த முழுப் பயனையும் அடைஞ்ச திருப்தி. ரெண்டு வினாடிக்குள்ள ஹாலிவுட் பாலா வந்து என் பின்னூட்டத்தை spam போல்டேர்ல போடச் சொன்னார். எனக்கு வந்ததே பாருங்க கோபம். வட எனக்குத்தான் அப்படின்னு போடறதுக்குப் பதில் 'வாடா' அப்படின்னு போட்டுட்டேன். எனக்கே உரிய இயல்புடன் (நான் ரொம்ப நல்லவங்க, சத்தியமா) அவரிடம் மன்னிப்புக் கேட்டேன் அந்த typo விற்காக. அவர் உடனே மன்னிச்சேன் போ, ஆனா ராமசாமி கவிதைப் படி அப்படின்னு சொல்லிட்டார். மன்னிப்புதான் பெரிய தண்டனைன்னு பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். நிறைய அது மாதிரி படிச்சிருக்கேன். இப்போதான் அனுபவ பூர்வமா உணர்றேன்.

    CCCF - Conceptual Clarity Contextual Familiarity

    நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா இதே மாதிரி நிறைய பின்னூட்டம் போடலாம்னு இருக்கேன்

    அப்புறம் மரண தண்டனை பத்தி நான் கொஞ்சம் கிறுக்கி இருக்கேன். முடிஞ்சா படிங்க

    http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.ஹ்த்ம்ல்

    பதிலளிநீக்கு
  37. நன்றி கோபி வருகைக்கும் கருத்துக்கும் :)

    பதிலளிநீக்கு
  38. //எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு
    நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி
    மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.//

    நச்சுன்னு சொல்லியிருக்கீங்க பொட்டிலடிக்கிறமாதிரி.

    ஆனா, கவிதையில் கோழியின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான் :)

    பதிலளிநீக்கு
  39. இயல்பே கவிதையாய்.. நல்லாயிருக்கு சார்..

    பதிலளிநீக்கு
  40. வித்தியாசமா இருக்குது...
    ஆனால்..!
    நல்லாயிருக்குது..!

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  41. ஹா ஹா ஹா
    மிக அருமை
    கவிதை முடித்திருக்கும் விதம் நன்று
    கொன்னா பாவம் திண்ணா போச்சு மாதிரி
    எவன் செத்தா எனக்கென்ன ஆச்சு ங்குற‌
    மறத்த மனங்களின் சாட்சியாக உள்ளது கவிதை

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்