சொத்து

மேலத்தெரு கிருஷ்ணண் ஆசாரிக்கு
இன்று பத்தாம் நாள் காரியம்
காரியம் முடிந்து மூத்த அண்ணன் சொன்னான்
மேலத்தெரு வீடும் ரைஸ் மில்லும் எனக்கு
கொல்லபட்டிதென்னந்தோப்பும் 
10 ஏக்கர் கரிசல் காடும் எனக்கு
சின்ன அண்ணன் சொல்லிப்போனான்
மகளுக்கும் சம உரிமை இருக்கு
எல்லாம் நகையும் எனக்குத்தான்
சொல்லிபோனாள் வீட்டின் கடைக்குட்டி லச்சுமி
 யாரும் கேக்காத அம்மா  சொன்னாள்
அய்யா எல்லாரும் சாப்பிட வாங்க
பசியாத்திட்டு அப்புறம் பேசிக்கடலாம்

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

13 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. //யாரும் கேக்காத அம்மா சொன்னாள்
    அய்யா எல்லாரும் சாப்பிட வாங்க//

    அதுதாங்க அம்மா!

    மிக நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  2. நானும் சொல்ல நினைத்ததுஅதுதான்.. அதுதான் அம்மாவென்று.. அருமை

    பதிலளிநீக்கு
  3. அம்மாங்க ரெண்டு பேர் சொன்னதுதான் அம்மா. அதாவது சத்தியம்.:)

    பதிலளிநீக்கு
  4. ஆஹா.. அவரவர் குணங்களை அப்படியே காட்டிட்டீங்க

    பதிலளிநீக்கு
  5. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
    அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
    Feel பண்ணக்கூடாது..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்