குற்றம் - 2


காட்சி 1

“ என்னப் பெத்த இராசா ஒன்னைய இந்த கோலத்துல பாக்கறதுக்கா நான் இன்னும் உசிரோட இருக்கேன்.” மாரி முத்துவை பார்த்த உடன் பொன்னாத்த கிழவியின் அடி வயிற்றில் இருந்து கிளம்பிய அந்த சத்தத்தில் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் எல்லாம் கிழவியை திரும்பி பார்த்தனர். 

கிழவியின் ஒப்பாரியை கண்டு எரிச்சலடைந்த வக்கில் ஸ்ரீதரன் “ எப்பா கணேசா நீ ஒன் ஆத்தாவ கூப்பிட்டு கொஞ்சம் வெளிய போய்யா. நீங்க வந்தாளாது அவன் வாய தொரந்து பேசுவான்னு சொல்லி உங்கள கூப்டுட்டு வநதா நீங்க இங்க வந்து இப்படி கத்துனா நான் என்ன பண்ண” என்று கத்தியதை கேட்டு கிழவியை கணேசன் வெளிய தள்ளிக்கொண்டு போனான்.

கிழவி போன உடன் “ எப்பா மாரிமுத்து எப்படி இருக்க. இங்க வெச்சு கேக்க கூடாதுதான். ஏன் கேக்கிறேனா போலிஸ் காரங்க எதுவும் தொந்தரவு பண்ணினாங்களா. யாரும் எதுவும் கைய கிய்ய வைக்கிலேயே” என்றவரை பார்த்து இல்லை என்றமாதிரி தலையசைத்து வைத்தான் மாரிமுத்து.

“ ஏம்பா இதுக்கு கூட வாயை தொறந்து பதில் சொல்ல மாட்டியா. என்ன மவுன விரதமா இருக்க. நீ எதுனாச்சும் பேசுனாதான் என்னையால எதுவும் செய்ய முடியும். உனக்கில்லாட்டியும் இன்னும் மூனு பேரு ஒன்னைய நம்பி இருக்காங்க " என்றவரிடம்  “சரிங்கய்யா” என்றான் மாரிமுத்து முதன் முதலாக. 

காட்சி 2
 மாரிமுத்துவிடம் பேசி முடித்து விட்டு வெளியே வந்த ஸ்ரீதரன் “ நீங்க எதுவும் பேசனுன்னா போய் பேசிட்டு வந்துருங்க. ”  என்றவ்ரை பார்த்து “ சரி சார் ” என்றான் கணேசன்.

“ ஆத்தா வா உள்ளார போய் அண்ணண பாத்துட்டு வரலாம்” என்ற கணேசனிடம் “ இல்லையா நீ போய்ட்டு வந்துரு . நான் திரும்பி உள்ளார வந்தா அழுது வெச்சுருவேன். நீ போய் அவனுக்கு தைரியம் சொல்லிட்டு நல்லதா நாலு வார்த்த பேசிட்டு வா. போ” என்றாள் கிழவி.

சுவர் ஒரமாக நின்றிருந்த மாரிமுத்து “ அண்ணே” என்று கூப்பிட்ட கணேசனின் குரல் கேட்டு திரும்பினான்.

“ கணேசு நல்லா இருக்கியா. ஆத்தா எப்படி இருக்கு. அதே நல்ல படியா பாத்துக்க”  என்ற் மாரிமுத்துவை பார்த்த கணேசன் “ ஆத்தா சதா சர்வ காலமும் ஒன்னைய நெனச்சுகிட்டு பொலம்பிக்கிட்டே கிடக்குன்னா” என்றான்.

“ அண்ணிய பாத்தியாடா”  என்றான் மாரிமுத்து.

 “ இல்லைனனா நாலு நாளைக்கு முன்னாடி போயிருந்தோம் நானும் ஆத்தாவும். ஆனா அவுக வீட்டு வாசல்லேயெ நிறுத்தி பேசி அனுபிச்சாடாங்கன்னே.   ஆத்தா கூட வாவும் வயிறுமா இருக்கற பொன்ன பாத்துட்டு போயிறோம்னு சொல்லிச்சு. அதுக்கு அண்ணி எங்கள் பார்க விருப்பம் இல்லைன்னு சொல்லிருச்சுன்னா ” என்றான் கணேசன்.

 “ சரி வுடு கணேசா . நாலப்பின்ன செரியா போவும். நீ சம்முவத்தா பாத்தியா” மாரிமுத்து.


“ அண்ணா அந்த செவத்த மூதி எங்க பாத்தும் கிடைக்கலன்னா. அவன் மட்டும் ஏன் கையில கிடைச்சான் அவன சவமாக்கிட்டுதான்னா வேற வேல” என்றான் குரலில் ஆத்திரத்துடன் கணேசன்.


“ கணேசு ஆத்திரப்படாத.  நீ ப்டிச்சவன். அவன் எங்கின இருந்தாலும் தேடி கண்டு பிடி. அவன் நமக்கு வேணும்” என்றான் மாரிமுத்து.


அண்ணண் குரலுக்கு அனுக்கமாக தலை ஆட்டினான் கணேசன்.

காடசி 3

அந்தி சாயும் அந்த நேரத்திலும் சூரியனின் வெப்பம் தகித்து கொண்டிருந்தது.  அந்த வெப்பத்திலும் கூட மதுரை மீனாச்சியம்மன் கோயிலை சுத்தி நகர்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எரும்பு சாரைய போலிருந்தது.

அப்பொழுது தானப்ப முதலி தெருவின் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன ஒட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அவனின் கண்கள் மூன்று நாள் இடை விடாது தூங்கி எழுந்தவனின் கண்களை ஒத்திருந்தது.

அப்படியே செண்ட்ரல் தீயேட்டரை நோக்கி ந்டந்தவனின் வேட்டி தொடைக்கு மேல் ஏறியிருந்தது. எதிர்க்க அவனை இடிப்பது மாதிரி வந்த சைக்கிள் காரனை பார்த்து  வாயில் சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளை உதிர்து விட்டு நகர்ந்தான். பதிலுக்கு அவனும் இவன் பரம்பரையில் வந்த பெண்களின் பெருமைகளை ஊருக்கு உரக்க சொல்லி விட்டு கடந்தான்.

வழியில் நின்றிருந்த கடலை வண்டிக்காரனிடம் ஒத்த ரூபாய் கொடுத்து அவன் தந்த கடலை பொட்டலத்தை பிரித்து படித்துக்கொண்டே நகர்ந்தான். செண்ட்ரல் தியேட்டர் வரவும் கடலை காலியாகவும் சரியாக இருந்தது. பொட்டல பேப்பரை பிரித்தவன் ஒரு மாததிற்கு முன்னதாக படத்துடன் வெளியாகி இருந்த “ கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் மரணம். கொலையாளி கைது” என்ற செய்திக்கு கிழே வெளியாகிருந்த படம் மாரிமுத்துவின் படமாயிருந்தது. பேப்பரை கசக்கி வீசியெறிந்து விட்டு “ ஒக்காலி அவசரப்பட்டுடான் ரொம்ப” என்றவாரு நகர்ந்தவ்ன் மாரிமுத்துவுக்கு மிகவும் வேண்டப்பட்ட ச்ம்முவம் என்றழைக்கபட்ட சண்முகமேதான்.

-- தொடரும்

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

5 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. அதிர்ச்சியான முடிவு ..

    பதிலளிநீக்கு
  2. சூடு பிடிக்குது கதை.. :) கலக்குங்க.. ”குற்றம் - 1” அப்படின்னு போட்டுருக்கீங்களே..? 2 தானே? காட்சி எண்களும் 123 திரும்ப வர்றதால இங்கயும் non-linear-ரோன்னு நினைச்சுட்டேன்.. :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல விறுவிறுப்பான நடை....
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்