தீவிரவாதம்

இந்த திங்ககிழமை வந்தாலே சந்தோசம்தான்.. ஸ்கூல் கு போகலாம் .. பசங்க  கூட சேந்து விளையாடலாம்.. அனா இனிக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. ரேங்க் கார்டு ல அப்பா கிட்ட   இன்னிக்கு உள்ள கையெழுத்து வாங்கி குடுக்கணும்.. இல்லென டீச்சர் அடிப்பாங்க.. கணக்கு பரிச்சைல மார்க் கமியா வாங்கினதுனால அப்பா கிட்ட அடி வேற கிடைக்கும்.. இதல்லாம் யோசிச்சுகிட்டே குளிக்க போன்னேன்.

  "சனியனே இன்னும் குளிச்சு முடிகலையா .. எமுடு நேரம் ஆகுது.. சிக்கிரம் வந்து தொள" . அம்மாவோட சத்ததே கேட்ட உடனே , வெளில வந்து சாமி படம் முண்ணாடி நின்னு மனசுக்குள்ள  கடவுளே அப்பா அடிக்காம காப்பாத்துன்னு    வேண்டினா  சாமி என்னைய பார்த்து  சிரிகிது..

நியூஸ் பேப்பர் படிச்சுகிட்டு இருந்த அப்பா நிமிந்து பாத்து  "என்னடா ஸ்கூல் கு கிளம்பாம என்ன பண்ணறேன்னு கேக்கறப்ப ரேங்க் கார்டு எ எடுத்து நிட்டின உடனே என்னது இது ரேங்க் கார்டு எ , போயி பேனாவ எடுத்துட்டு வான்னு சொன்ன உடனே அப்பாடின்னு நினச்சுகிட்டே போய் பேனாவ எடுத்துட்டு வராதுகுள்ள ரேங்க் கார்டு எ பார்த்து முடிச்சிட்டு என்னைய பார்த்து முரசிக்கிட்டு கையெழுத்து போட்டுட்டு மண்டை ல நங்குன்னு ஒரு கொட்டு வெச்ச உடனே சொய்ங் நு காதுக்குள்ள ஒரே சவுண்ட்..

இன்னொரு கொட்டு வெக்க முண்ணாடி கண்ணுலேந்து தண்ணி வந்தத பார்த்துட்டு அடுத்த தடவ பாஸ் பன்னேலேனா வருத்த உப்பு மேள்ள முட்டி போடா வேசுருவேணு போய்ட்டாரு.. அம்மா சாப்ட குப்ட்ட உடனே போய் சாப்டுட்டு வரப்ப டிவி நியூஸ் ல பாகிஸ்தானில் தீவிரவாதி வெய்த்த குண்டு வெடித்து 100  பேர் பலின்னு நியூஸ் வந்துட்டு இருந்துச்சு.. அப்பா கிட்ட கேட்டேன் அப்பா "திவிரவாதம்னா என்ன" ?

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

9 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. :) :)
    ---

    நேத்து நைட்டே படிச்சிட்டேங்க. பதில் எழுத முடியலை!
    ---

    பதிலளிநீக்கு
  2. nalla irukku kathai sorry unga chinna vayasula nadathathu ...
    appa va bayamuruthira mathiri irukku... ippa thaan appadeenu ninaichen aana muthalla iruthe appadithaana...

    பதிலளிநீக்கு
  3. ஆகா.. பொங்கல் அன்னிக்கு... முதன்முதலா பதிவு பிரபலமாகியிருக்கு!

    வாழ்த்துகள்! :)

    பதிலளிநீக்கு
  4. சாத்தூர் காரசேவு போல கதை நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்